செய்திபாடசாலை

லஞ்சம் கோரிய பாடசாலை அதிபர் கைது

ஒன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக கூறப்படும் ராகம ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ராகம பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பிள்ளையை அடுத்த வருடம் முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கு அதிபர் பணம் கேட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அதிபர் பள்ளி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து  22 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×