
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களிடமிருந்து அந்தப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அடங்கிய விபரம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிவித்தல், பாடசாலைப் பதிவு, புள்ளியிடும் நடைமுறை, மாதிரி விண்ணப்பப் படிவங்கள் என்பன கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் 31ஆம் திகதி கடைசி நாளாகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ள முடியும்.