செய்திபாடசாலை

மேல் மாகாண டியுசன் தடை சுற்றுநிருபம் – இடைநிறுத்தப்பட்டது

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் மேலதிக கல்வி வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதித்து அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பிறகு, வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் மீளாய்வு மற்றும் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும் வரை, சுற்றறிக்கையை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர் நிஷாந்தி ஜயசிங்க கையொப்பமிட்ட சுற்றறிக்கை கல்விப் பணிப்பாளர், வலயப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கையே தற்போது இடைநிறுத்தப்பட்டடுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×